tag:blogger.com,1999:blog-67019478756103007072024-03-13T04:24:20.808+05:30மதன் கவிதைகள்Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-23973931410712787302015-03-10T16:32:00.000+05:302015-03-10T16:46:40.015+05:30இரசனை
இரசிக்கத் தெரிந்தவர் மட்டுமே
இந்த பூமியின் புதல்வர்.
மற்றவரெல்லாம்
பித்தனென்று காண்.
மழையை இரசித்துப்பார்
வானத்தின் வலிதெரியும்
காற்றை இரசித்துப்பார்
காதலின் சுகம் புரியும்
இரசித்தல் ஒரு தவம்
இரசித்தல் ஒரு தியானம்
சின்னச் சின்ன விடயங்களை
இரசித்துப்பாருங்கள்
துரும்பிலும்
கடவுளைக்கானலாம் என்பது புரியும்
ஏன்?...
ரசிகனுக்குக் கல்லே கடவுள் அல்லவா!
இரசனையில் தானே
சாதிகள் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-60768314890148611962014-04-13T18:51:00.000+05:302014-04-13T18:56:28.007+05:30அன்பின் நண்ப ஜனா...
அன்பின் நண்ப ஜனா... நலமே வாழ்க அன்டறொரு நாள் புத்தி புரியா காலங்களில் ஒட்டிக் கொண்டது நம் உறவு ஓசை இல்லாத பாசிக்குடாவாய் நீயும் மௌனம் மறந்த மார்க்கெட்டாய் நானும் மனங்களை மாற்றிக் கொண்டதை எப்போது நினைக்கையிலும் எட்டாவது அதிசயந்தான் டா' என்று உரிமை எடுக்க முட்கம்பி வேலி போட்டு முன்னுக்கு உட்காந்திருந்தது உன் மாமியின் டாக்டர் பட்டம் அது எமது முதல் ஜென்மம் இப்போதும் ஒட்டிக் கொண்டே தொடர்கிறது...Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-62861371238675328382014-03-21T21:41:00.002+05:302014-03-21T21:41:35.095+05:30வேலழகன்
வேலழகன் பேச்சினிலே பால் ஒழுகும் - அவர்மூச்சினிலும் கவி வீச்சினிலும் திருக் குறள் மணக்கும்ஆலமரம் போலவரின் பெயர் பரக்கும் - அவரைமேவயினி மேதினியில் யார் பிறப்பர்?வள்ளுவரின் வாய்மொழியில் வாழுபவர் -தமிழ்பள்ளு முதல் பா வரையும் கூறுபவர்துள்ளுமவர் நாவினிலே நாணயங்கள் - இளைஞர்கொள்கை பெறச் சிந்தனைகள் ஊட்டுபவர்உருமால் இல்லா பாரதி இவரோ சாரதி – நீஒருகால் இவருடன் பழகிப் பார் அவர் சார் அதிதிருப்பழுகாமம் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-17187214525276319912014-03-21T21:34:00.000+05:302014-03-21T21:34:10.438+05:30மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் நடத்திய அன்புமணி நினைவு தினம் - 22.03.2014
அன்புமணி ஐயா!நீங்கள் மரித்தது மெய்யா?சீச்சீ பொய் பொய் பொய்உங்கள் அன்பு கண்டுஅவன் அழைத்திருப்பான்இடம் மாறியது உன் சேவை - இங்கேதடம் கோணியது தமிழ் (சங்கம்)தமிழுக்குச் சற்றுத் தலைக்கணம்தான்நீ இருந்தவைரைதமிழ்ச் சங்கத்துக்கும் விலை கனந்தான் நீ இறக்கும் வரைஆரையூர் தந்த முத்து நீஅனைவருக்கும் வந்த சொத்து நீ –எங்கள்அனைவருக்கும் வந்த சொத்து நீதங்கப் பிள்ளை எனும் பத்தினிஎமக்கீர்ந்த தமிழ் வித்து Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-22211680380029613802013-11-11T18:41:00.001+05:302013-11-11T18:52:47.421+05:30இன்னமும் உன்னையே நேசிக்கிறேன்
என் தனிமையை எப்போதும்
உன்னுடனேயே
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
யாருமில்லா தனியறையில்.....
நதியோர மர நிழலில்....
ஊர் உறங்கும் பேரிருளில்
ஓற்றை மெழுகுவர்த்தியில்
நீயும் நானும் மட்டுமே
வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
பிரியும் நேரம் விரையும் போது
எத்தனை துன்பமோ
உன்னை எனதாக்கிக் கொண்டபோது
நான் அடைந்ததும் அத்தனை இன்பம்
எத்தனை இரவுகள்
ஒரே தலையணையில்
நீயும் நானும்.....
உன் பரிசத்தோடு
உறங்கிய Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-7280995645536221192013-11-11T15:43:00.002+05:302014-04-13T18:55:38.121+05:30ரயில் பயணம்
புன்னகை புகை பூக்க
விரைகிறது புகைவண்டி
பாவம் பக்கத்துவீடுகள்...
பரவாயில்லை காட்டுமரங்கள்...
தலைவருடும் காற்றில்
கரைந்தே தொலைகிறது
காணிக்கையாக்கிய இரவுகள்.
எதிரே இன்பராசா
இடப்பக்கம் இன்னுமிருவர்
மொத்தமாய் மூவரையும்
முழுதாய் விழுங்கிய வெற்றிக் களிப்பில்
இரவுக்கு வயது பத்துமணி
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காரிருளின் கைவரிசை
மனதுக்கெட்டிய தூரம்வரை
மாய்த்திருக்கும் மனப்பதிவுகளை
கோத்தெடுக்கும் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-16577427938528764002013-05-10T11:44:00.001+05:302013-05-10T11:44:34.340+05:30முதற்பார்வை..
முதன் முதலாய் இன்று
இருதயம் கனக்கிறது
நீ என்னைக் கடக்கையிலே
இரசாயனங்கள் என்னுள்
இரகசியம் பேசிக்கொள்கின்றன...
உன்னவள் இவள்தான் என்று
பழகப் பழகப் பாலும் புளிக்குமாம்
யாரிங்கு பொய் சொன்னது ?- உன்னைக்
கண்ட பின் தானே
பழஞ்சோறு சுடுகின்ற
அதிசயம் நடக்கின்றது!
ஆயிரம் குயில்களின்
சேர்க்கையை உந்தன்
குரல் நாண்கள் பகர்கின்றன - அந்த
அதிசயக் கங்கையின்
அசைவு உன் கூந்தலில்Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-78564540195186715662013-05-03T20:07:00.001+05:302013-05-03T20:11:07.106+05:30கவனம்!பார்த்துது நட
கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
காட்டுவழி போற மச்சான்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந் தருவாயா – உந்தன்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந்தருவாயா – மனசுக்குள்ள
இடந்தருவாயா?
பட்டப் பகல் வேளையிலே
பாட்டுக்கட்டி நான் படிக்க
கேட்டுக்கிட்டு நீயிருக்க
போய் வருவாயா - இல்லை
விட்டு விட்டு ஓடிநீயும்
போய் மறைவாயா?
பிட்டுடனே வாள மீனு(க்)
கூட்டுவச்சி நான் தரவா
கட்டித்தயிர் சட்டியையே
ஒட்டுமொத்தமாய்த் தரவா
வெட்டி வேலை Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-23529917478501545902013-05-03T20:03:00.002+05:302013-05-03T20:03:53.964+05:30என் காதலியே
சுந்தரமானவளே!இந்திரன் பொன்ரதமே! - உன்மந்திரப் புன்னகையால் - எனைஎந்திரமாகவே விந்தைசெய்விண்மதியே!உன் புன்னகை வாங்கித்தானோசில்லரைகள் சிணுங்கிக் கொள்கின்றனஅடம்பிடிக்கும் காக்கைகள் கூடஉன்குரல்கேட்டு ஆனந்தம் கொள்கின்றனநீ இடம்பிடிக்க ஓரிடம் கேட்டால்என் இருதயம் கூட இடம்மாறி நின்றுபோரிடப்பாக்கிறதே!உன் வெட்கத்தை உரித்தாசெவ்வானம் இங்கே சேலையுடுத்திக் கொள்கிறதுஉன் செவ்விதழ் பட்டாமின்சாரம் தன்னை Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-20081444966986431462013-05-03T16:54:00.004+05:302013-05-10T13:29:52.936+05:30கொல்லென்று சொல்
பிறப்புக்கு நாங்கள் வேண்டும்
பிறகெல்லாம் நீங்க வேண்டும்
இறப்புக்கும் இறுதி மட்டும்
இருந்தாக வேண்டும் பின்னர்
சிறப்புக்கு மட்டும் நாங்கள்
தொலைதூரம் போகவேண்டும்.
துறந்திடல் வேண்டும் சாதி
மறைந்திடல் வேண்டும் மண்ணில்.
விளையாட்டு நண்பன் வந்தால்
விருந்தோம்பல் கொல்ல வேண்டும்
முளைவிட்டால் நாங்களெல்லாம்
முடங்கியே செல்ல வேண்டும்
பிழையென்று கண்டும் நீங்கள்
பிற்போக்காய் ஆவதென்ன
களையென்று சாதிப் பேயை
Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-45829756903979422042013-05-03T16:53:00.001+05:302013-05-03T16:53:15.454+05:30சின்னச் சின்ன ஆசை
மண்ணின் மடியில் தலைசாய்க்க ஆசைமலருடன் மனம்விட்டு கதைபேச ஆசைநெஞ்சை நொருக்கும்கொடிய இடியுடன்கொஞ்சிக் குலாவிகொலுபோக ஆசைமின்னல் பிடித்து வான் ஏற ஆசைஜன்னல் வழியே மழைகாண ஆசைகுடையின்றி சாலையில்நெடுநேரம் நனைந்துநடைபோட எனக்குநெடுநாளாய் ஆசைபௌர்ணமி நிலவில்கடல் காண ஆசைபகல்விரிக்கும் இரவின்உடல் காண ஆசைதலைகோதும் என்னவளின் மடிசாய்ந்து நானும்சிலையாகிப் போயிடவேபிடிவாத ஆசை
Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-66395098631517075992013-05-03T16:50:00.002+05:302013-05-03T16:50:37.389+05:30கிள்ளை விடு தூது
நெஞ்சு கிளந்தௌவஞ்சி அழுந்திடசெஞ்சிறை போவெனசொல் கிளியே - தமிழ்வஞ்சமுண்டென்றுநீ சொல் கிளியே!பஞ்சமெமக்கிலைகெஞ்சலழகிலைஎஞ்சியவன் செவி சொல்கிளியே - தமிழ்தஞ்சமிலை என சொல்கிளியே!மாண்டவர் பூமியைஆண்டவர் நீயெனமீண்டெழுந்து நீ சொல்கிளியே - தமிழ்தாண்டுபோகாதென சொல் கிளியே!வெந்து சிறை படும்எந்தனினத்தவர்சொந்தமுண்டென்றுபோய்சொல்கிளியே - தமிழ்பந்தமுண்டென்று நீ சொல் கிளியே!ஊரையழித்திடும்போரைப் படைத்தவர்நாரையுரித்திடMathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-72529346082068121252013-05-02T19:31:00.002+05:302013-05-02T19:31:54.035+05:30கவிஞர் நிலாதமிழின் தாசன் அவர்களுக்கான வாழ்த்துப்பா
இது போதும்எனக்கு - உனை வாழ்த்தும்
இது போதும் எனக்கு - வேறு எது வேண்டும்
ஐம்பத்தி மூன்றில் நின்பிறப்பு - உன்
கவித்துவம் முட்டுது வான்பரப்பு
உன்னால் தான் இம் மண் சிறப்பு
உண்மையிது உனக்கேன் புன் சிரிப்பு
நிலா தமிழின் தாசன்
பெயரின் முன்னால் ஒரு குளிர்ச்சி
உன்னோடு பேசுகையில் தன்னால் வரும் மகிழ்ச்சி
உன் கவியால் பெற்றது தமிழினம் அன்றொரு எழுச்சி
இந் நாள் பெறுகிறது களுதாவளை ஒரு உயர்ச்சி
Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-25510535099708166482013-05-02T18:51:00.003+05:302013-05-02T18:57:32.279+05:30கவிஞர் நீலாபாலன் அவர்களின் “கடலோரத் தென்னை மரம்” என்ற கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் என்னால் பாடப்பட்ட கவிவாழ்த்து.
கல்முனை தந்த முத்து நீ – இந்த
ஹத்தாவுள’ வந்த சொத்து நீ – இந்த
‘ஹத்தாவுள’ வந்த எங்கள் சொத்து நீ
பூரணிப்பிள்ளை எனும் பத்தினி
எமக்கீர்ந்த கவி வித்து நீ
நல்லதம்பியின் ஏக புத்ரன் நீ
எமக்கெல்லாம் கவி அப்பன் நீ
செவி ஏறலிலே கவி படித்தாய்
கவி பாடலிலே புகழ் படைத்தாய்
மரபுடைத்தாய் புதுவுருவெடுத்தாய்
நவ சரித்திரம் வடித்தாய்
அன்று…
நீலாவணனால் பண்பட்டாய்
துணையின் பெயரை Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-43802952549587551382012-10-17T21:42:00.001+05:302013-05-01T18:42:44.434+05:30?
கறுப்பாயிருப்பானோ? - இல்லை
கற்கண்டுக் கலர்போல
எடுப்பபரிருப்பானோ?
வேட்டி அ ணிந்தவனோ - விரல்
நீட்டிக் கதைப்பானோ?
பாட்டி அருகிருந்து - கதை
கேட்டு வளர்ந்தவனோ
என்ன மொழியில்
எப்படி அவன் கதைப்பான்
தின்ன வழிக்காக
என்ன தொழில் அவன் செச்வான்?
ஆறடி இருப்பானோ?
நூறடி இருப்பானோ?- இல்லை
ஆண்டாரையும் தாண்டி
ஆகாயம் தொடுவானோ?
மச்சம் உண்பவனோ? - அவனுக்கு
இச்சை மரக்கறியோ?
எச்சியிலை நான் உண்ண
மிச்சம் வைப்பானோ?Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-71762533495438688402012-04-03T01:26:00.002+05:302013-05-02T18:57:51.408+05:30புரிந்துணர்வு
அவன்மேலோ அல்லது
அவள்மேலோ உனக்கு
புரிந்துணர்வு வந்தால்
பிரிவுகள் பாடையேறும்.
“ம்” கூட இதிகாசம் எழுதும்
“உம்” சொன்னாலும்
சொல்லா விட்டாலும்
உண்மை விளங்கும்
மௌனம் கூட உனக்கு
பதில் சொல்லும்
இடைவெளிகள்
இடைநிறுத்தம் செய்யூம்
மாற்றுக் கருத்துக்கள்
மன்னிப்பு மனுக்கோரும்
புரிதலால் அல்லவா
கோடையெனும் கொடிய
ஊடலின் பின்னரும்
பூமியும் வானும்
மழைக் கரத்தால்
கைகோர்த்துக் கொள்கின்றன.
புரிதலில் அல்லவா
பூக்களும் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-23926809373099098042012-04-03T01:23:00.001+05:302013-05-02T18:59:12.374+05:30பதறித் துடிக்கும் இதயம்
மாரிகாலம் தொடங்கிறது
மழையும் மெல்லப் பெய்கிறது
பாரிலுள்ள பயிரனைத்தும்
பருவமடையத் தவிக்கிறது
ஊரும் உறங்கிக் கிடக்கிறது
உலாவித் திரிய வழியுமின்றி
ஏரும் எருதும் உழைக்கிறது
எல்லோர் வாழ்வும் உருள்வதற்கு
காகிதங்கள் தரையிலிங்கே
கப்பல் வடிவம் எடுக்கிறது
லேகியங்கள் உண்ட வண்டாய்
வாண்டுக்கூட்டம் பறக்கிறது
ஈசல் வெளியே பறக்கிறது
இதயம் அதற்காய் அழுகிறது
பாசம் கொண்ட நம்மையெல்லாம்
பதறித் துடிக்க Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-81435950065546813792012-04-03T01:21:00.002+05:302013-05-02T18:59:29.462+05:30வைகாசித் திங்கள்
மட்டக்களப்பெங்கும் வைகாசித்திங்களில்
மண்ணும் மணக்கின்றது - அங்கே
பட்டி தொட்டியெங்கும் கண்ணகி
பாடலால் காதும் குளிர்கின்றது.
பறையொலி முழக்கமும் குழல்நய ஓசையும்
பண்பாடு சொல்கின்றது - அங்கே
நிறைமகள் கண்ணகி கோயில்கள் தோறும்
நிலவொளி தோற்கின்றது.
உருக்கொண்ட காவடி ஓசைகளங்கே
ஊரெல்லாம் ஒலிக்கின்றது -எல்லாத்
தெருக்களும் அங்கே திருவிழாக் காணவே
தவக்கோலம் பூண்கின்றது.
கும்மி குரவையும் கூத்தும் வசந்தனும்
Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-77241173470322180432012-04-03T01:20:00.002+05:302013-05-02T18:57:24.425+05:30கவிநயம்
மாருதம் தந்த நல் இலக்கியமே
போருடன் வாழ்வையும் இயம்பிடுமே
காதலும் கற்பையும் காட்டிடுமே
சாதலில் காப்பியம் நாட்டிடுதே!
எண்ணுவதெல்லாம் எழுத்துருவில்
பண்ணுடன் பண்ணுவோம் பாவடிவில்
மண்ணுடன் வாசனை சேர்திடவே
நன்னயம் போசனை ஆக்கிடுவோம்
சேற்றில் முளைத்தசெந் தாமரைபோல்
காற்றினில் கற்பனை ஏற்றிடுவோம்
நூற்றில் ஒரு கவி என்றிடவே – கனிச்
சாற்றின் சுவையுற வார்த்திடுவோம்
நாட்டின் நடப்புகள் காட்டிடவே
ஏட்டில் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-59760872066478586102012-04-03T01:18:00.003+05:302013-05-02T19:00:49.951+05:30தமிழ்மொழிவாழ்த்து
செந்தமிழே உனைப் பாட்டிசைப்போம்
வந்தனம் செய்து நாம் போற்றிவைப்போம்
எந் தமிழே யுனை யேற்றிடுவோம்
சிந்தையிலே யுனை நாட்டிவைப்போம்
வண்டமிழேயுனை வானுயர்த்த
தண்டணை தாண்டியும் நாம் பிறப்போம்
நற்றமிழேயுனை நாற்றிசையும்
நாயகனாக்கியே நாம்மகிழ்வோம்
Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-80532138248140634902012-04-03T01:17:00.000+05:302013-05-02T19:01:56.160+05:30பங்குனி - 8
பெண்களை என்றும் போற்றிடுவோம் - அவள்
கண்ணியம் தன்னைக் காத்திடுவோம்
அடுப்படி ஆகமம் மாற்றிடுவோம் - அவள்
படிப்பிலே அக்கறை காட்டிடுவோம்.
பங்குனி எட்டிலே நாளெடுப்போம் - அவள்
தங்கு தடை தகர்த் தோட்டிடுவோம்
மங்குமவள் மதி மாற்றிடுவோம் -பாரில்
எங்குமவள் புகழ் நாட்டிடுவோம்.
விண்வெளி வாகனம் ஓட்டிடுவாள் - அவள்
மண்ணின் பெருமையும் கூட்டிடுவாள்
வீட்டின் புகழ் எழ வாழ்ந்திடுவாள் - அவள்
நாட்டின் நலனுக்கும் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-64180755187030397192012-04-03T01:14:00.000+05:302013-05-02T19:04:01.862+05:30சொல்லாக் காதல்
ஒல்லிய இடையுடைப் பெண்ணாள்
ஒழுக்கத்தில் அவளொரு நல்லாள்
சொல்லிடில் அவளெழில் இந்நாள்
சோர்ந்துமே போயிடும் தன்னால்
மின்னிடும் மாதுளைப் பல்லாள்
செந்தமிழ் தோத்திடும் சொல்லாள்
தன்னிகரற்ரொரு மெல்லாள்
தரணியே சாய்ந்திடுமவள் பின்னால்
மல்லிகை இதழுருக் கண்ணாள்
மஞ்சளின் நிறமனைப் பெண்ணாள்
அல்லியின் ஒருபிடிச் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-13833831143668773192012-04-03T01:00:00.002+05:302013-05-02T19:04:58.509+05:30அன்னையே உனை ஆராதிக்கின்றேன்
ஏட்டிலே கவி காட்டியே - எனை
பாட்டிலே ஊறிட வைத்தவள்
ஊட்டியே தமிழ் நாட்டியே எனை
மரபாக்கியே மகிழ் வித்தவள்
சூட்டுவேன் மலர் ஏற்றுவேன் - உனை
பாட்டிலே பறை சாற்றுவேன்
காட்டிலே கன்று மாட்டியதை - புகழ்
நீட்டிட நேர்த்தியாய் வைத்தவுனை
நாவிலே கலை தூவியே -என்
பேதமை போயிட வைத்திடுவாள்
பாவிலே தமிழ் கூவிட - வெண்
தாமரை நாயகி ஏவிடுவாள்
மலர்வடிவம் அவள் திருவதனம்-பலர்
நிலை குலையும் தளிர் மறுவுருவம்
பல மலையுயரம் Mathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-54725259025009842362011-09-14T08:56:00.001+05:302013-05-02T19:06:58.267+05:30என்னென்று பொங்குவேன்.
(இக்கவிதை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தால் 2011 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவியரங்கில் என்னால் வாசிக்கப்பட்டது.)
பொங்குதம்மா இங்கு வெள்ளமெல்லாம் - துயர்
தங்குதம்மா மக்கள் உள்ளமெல்லாம்
மங்குதம்மா மனம் வேகுதம்மா - பலர்
ஏங்கையிலே தினம் நோகுதம்மா
தாங்க வழியில்லையம்மா - உயிர்
வாங்குமந்த அடைமழையில்
தூங்க முடியல்லையம்மா பாவம்
நாங்களென்ன செய்திடுவோம்!
வங்கமணையMathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6701947875610300707.post-51725394895703545242011-09-14T08:51:00.002+05:302015-10-25T09:38:12.700+05:30பௌர்ணமியில் ஓர்நாள்
பௌர்ணமி நிலவு
பழபழக்கும் இரவு
மெல்லும் உன் மௌனம்
கொல்லும் எனட யௌவனம்
இவை நடுவே…
நிலவில் கரந்தொழுகும்
இரவை நுகர்ந்தபடி
நட்சத்திரமெண்ணும் நான்…
சிறுவண்டின் சிறகோசை கேட்கும்
நிசப்பத்தில் நள்ளிரவு…
நகர்ந்தும் நகராமல் தோன்றும்
கடிவாளம் கட்டிய கடிகாரம்
நடுநிசியினில்
நாமிருவரும் நயப்பதுகண்டு
மூர்ச்சையாகிப் போகிறது
நகரும் முழுநிலவு.
நடக்கும் நிலவொன்றை
பார்த்த ஒருவனாய்
நான் மாண்டுMathanhttp://www.blogger.com/profile/12215527179711289347noreply@blogger.com0