பதறித் துடிக்கும் இதயம்

undefined undefined

மாரிகாலம் தொடங்கிறது
மழையும் மெல்லப் பெய்கிறது
பாரிலுள்ள பயிரனைத்தும்
பருவமடையத் தவிக்கிறது

ஊரும் உறங்கிக் கிடக்கிறது
உலாவித் திரிய வழியுமின்றி
ஏரும் எருதும் உழைக்கிறது
எல்லோர் வாழ்வும் உருள்வதற்கு

காகிதங்கள் தரையிலிங்கே
கப்பல் வடிவம்  எடுக்கிறது
லேகியங்கள் உண்ட வண்டாய்
வாண்டுக்கூட்டம் பறக்கிறது

ஈசல் வெளியே பறக்கிறது
இதயம் அதற்காய் அழுகிறது
பாசம் கொண்ட நம்மையெல்லாம்
பதறித் துடிக்க வைக்கிறது

மாடி வீட்டு மாந்தரெல்லாம்
மழையைக் கண்டு களிக்கையிலே
கூடியுண்ணக் குடில்களின்றி
ஏழையுள்ளம் துடிக்கிறது.

2 comments:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பசறை காவத்தை கனகராஜா சொன்னது…

அசத்தல் கவிதை அற்புதமாய் இருக்கிறது

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்