வேலழகன்

undefined undefined

வேலழகன் பேச்சினிலே பால் ஒழுகும் - அவர்
மூச்சினிலும் கவி வீச்சினிலும் திருக் குறள் மணக்கும்
ஆலமரம்  போலவரின் பெயர் பரக்கும் - அவரை
மேவயினி மேதினியில் யார் பிறப்பர்?

வள்ளுவரின் வாய்மொழியில் வாழுபவர் -தமிழ்
பள்ளு முதல் பா வரையும் கூறுபவர்
துள்ளுமவர் நாவினிலே நாணயங்கள் - இளைஞர்
கொள்கை பெறச் சிந்தனைகள் ஊட்டுபவர்

உருமால் இல்லா பாரதி இவரோ சாரதி – நீ
ஒருகால் இவருடன் பழகிப் பார் அவர் சார் அதி
திருப்பழுகாமம் காட்டிய கண்ணியப் பாவலர் - வேல்
முருகென்ற தீட்டிய (இ)ரத்தினத் தாரகை

புகழ் விரும்பா புண்ணியனே பொன்மகனே- நா
மகள் வந்து விளையாடும் நாவரசே
பகல் வந்து களவாடும் அகலைப் போலே- உன்
இகழ் வெந்து வெருண்டோட வாழ்த்துகின்றேன்

தீயிற்கும் தென்றலுக்கும் பாலமிட்டாய் - உன்
நாவலுக்கும் நாமத்திற்கும் நாமடிமை
கோயிலுக்குப் பேகாத கோமகனே – உன்
பாவனைத்தும் பார் புகழ வாழ்த்துகின்றேன்

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்