முதற்பார்வை..

முதன் முதலாய் இன்று
இருதயம் கனக்கிறது
 நீ என்னைக் கடக்கையிலே    

இரசாயனங்கள் என்னுள்
இரகசியம் பேசிக்கொள்கின்றன...
உன்னவள் இவள்தான் என்று

பழகப் பழகப் பாலும் புளிக்குமாம்
யாரிங்கு பொய் சொன்னது ?- உன்னைக்
கண்ட பின் தானே
பழஞ்சோறு  சுடுகின்ற
அதிசயம் நடக்கின்றது!  

ஆயிரம் குயில்களின்
சேர்க்கையை உந்தன்
குரல் நாண்கள் பகர்கின்றன - அந்த
அதிசயக் கங்கையின்
அசைவு உன் கூந்தலில்
அடக்கமாய் கிடக்கின்றதே!

மொத்தமாய் நானும்
பித்தாகிப் போகிறேன்  - நீயுன்
கட்டிய கணவனோடொட்டியே
போகயிலே.....

2 comments:

Ponnambalam kalidoss ashok சொன்னது…

நீயுன்
கட்டிய கணவனோடொட்டியே
போகயிலே.....முதன் முதலாய் இன்று
இருதயம் கனக்கிறது---very good poem in simple words..

Unknown சொன்னது…

உங்கள் கவிதை நல்லது

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments