கவனம்!பார்த்துது நட


கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
காட்டுவழி போற மச்சான்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந் தருவாயா – உந்தன்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந்தருவாயா – மனசுக்குள்ள
இடந்தருவாயா?

பட்டப் பகல் வேளையிலே
பாட்டுக்கட்டி நான் படிக்க
கேட்டுக்கிட்டு நீயிருக்க
போய் வருவாயா - இல்லை
விட்டு விட்டு ஓடிநீயும்
போய் மறைவாயா?

பிட்டுடனே வாள மீனு(க்)
கூட்டுவச்சி நான் தரவா
கட்டித்தயிர் சட்டியையே
ஒட்டுமொத்தமாய்த் தரவா
வெட்டி வேலை பாக்கிறாயே
கிட்ட வா மச்சான் - எனக்கு
சட்ட வாங்கிப் போட்டுத் தாலி
கட்ட வா மச்சான்.

எட்டுப் புள்ள பெத்துப் போடு
பட்டுப்போல நான் வளர்க்க
மாட்டு வண்டி கட்டிப் போடு
நாட்டை நாம சுத்திப் பார்க்க

(வேறு)
சொட்டுச் சொட்டா உன்ன நானும்
சுட்டுக் கொல்லுவண்டா – நீயும்
எட்டி எட்டி வேற பொண்ண
தொட்டுப் பார்த்தயண்டா!

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments