என் காதலியே

சுந்தரமானவளே!
இந்திரன் பொன்ரதமே! - உன்
மந்திரப் புன்னகையால் - எனை
எந்திரமாகவே விந்தைசெய்
விண்மதியே!

உன் புன்னகை வாங்கித்தானோ
சில்லரைகள் சிணுங்கிக் கொள்கின்றன
அடம்பிடிக்கும் காக்கைகள் கூட
உன்குரல்கேட்டு ஆனந்தம் கொள்கின்றன
நீ இடம்பிடிக்க ஓரிடம் கேட்டால்
என் இருதயம் கூட இடம்மாறி நின்று
போரிடப்பாக்கிறதே!

உன் வெட்கத்தை உரித்தா
செவ்வானம் இங்கே
சேலையுடுத்திக் கொள்கிறது
உன் செவ்விதழ் பட்டா
மின்சாரம் தன்னை
மிகைப்படுத்திக் கொள்கிள்கின்றது!


எனக்கெனப் பிறந்தவளே – என்
உயிரையும் கறந்தவளே
மனச்சுவர் ஆயிடையில் என்னில்
தினம் தினம் பிறப்பவளே!

காலாற நீ நடக்க
கருங்குவளை மலர் பறிப்பேன்
வாயாற நீ படிக்க
வண்ணத்தமிழ்  யான் சமைப்பேன்

தெவிட்டாத புன்னகையில்
பித்தாகி நான் மரிப்பேன் - பின்
தேனூறும் வார்த்தையிலே
மொட்டாக மீழ் துளிர்ப்பேன்.

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments