சின்னச் சின்ன ஆசை

மண்ணின் மடியில் தலைசாய்க்க ஆசை
மலருடன் மனம்விட்டு கதைபேச ஆசை

நெஞ்சை நொருக்கும்கொடிய இடியுடன்
கொஞ்சிக் குலாவிகொலுபோக ஆசை

மின்னல் பிடித்து வான் ஏற ஆசை
ஜன்னல் வழியே மழைகாண ஆசை

குடையின்றி சாலையில்நெடுநேரம் நனைந்து
நடைபோட எனக்குநெடுநாளாய் ஆசை

பௌர்ணமி நிலவில்கடல் காண ஆசை
பகல்விரிக்கும் இரவின்உடல் காண ஆசை

தலைகோதும் என்னவளின் மடிசாய்ந்து நானும்
சிலையாகிப் போயிடவேபிடிவாத ஆசை

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments