பதறித் துடிக்கும் இதயம்

மாரிகாலம் தொடங்கிறது
மழையும் மெல்லப் பெய்கிறது
பாரிலுள்ள பயிரனைத்தும்
பருவமடையத் தவிக்கிறது

ஊரும் உறங்கிக் கிடக்கிறது
உலாவித் திரிய வழியுமின்றி
ஏரும் எருதும் உழைக்கிறது
எல்லோர் வாழ்வும் உருள்வதற்கு

காகிதங்கள் தரையிலிங்கே
கப்பல் வடிவம்  எடுக்கிறது
லேகியங்கள் உண்ட வண்டாய்
வாண்டுக்கூட்டம் பறக்கிறது

ஈசல் வெளியே பறக்கிறது
இதயம் அதற்காய் அழுகிறது
பாசம் கொண்ட நம்மையெல்லாம்
பதறித் துடிக்க வைக்கிறது

மாடி வீட்டு மாந்தரெல்லாம்
மழையைக் கண்டு களிக்கையிலே
கூடியுண்ணக் குடில்களின்றி
ஏழையுள்ளம் துடிக்கிறது.

2 comments:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பசறை காவத்தை கனகராஜா சொன்னது…

அசத்தல் கவிதை அற்புதமாய் இருக்கிறது

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments